Friday, December 24, 2010

பத்திரிக்கை செய்தி

பத்திரிக்கை செய்தி
பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய பொது குழுக்கூட்டம்
பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய பொது குழு தேனியில் 20௦.12 .2010 அன்று நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அகில இந்திய சேர்மேன் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார் . அவர் தனது தலைமை உரையில் தேசத்தை வலிமை படுத்தும் , சமுகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடிய ஜனநாயக மற்றும் மனித உரிமை பாதுகாக்க முன்வர வேண்டும் பாபுலர் பிரண்ட் ஒரு கட்டுக்கோப்பான செயல்வீர்கள் கொண்ட இயக்கம் எனவே சமூகத்திற்கு முன்மாதிரியாக நிகழக்கூடிய செயல்வீரர்களை வார்த்தெடுப்பதில் , ஒழுக்கம் கட்டுப்பாடு ஆகிய நற்பண்புகளை வளர்ப்பதில் பாபுலர் பிரண்டின் அணைத்து மட்டத்தில் உள்ள தலைவர்களும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் சமூக சீர்திருத்தத்தையும் , அரசியல் முன்னேற்றத்தையும் வெறுக்கும் சக்திகள் பொய் பிரசாரத்தின் மூலம் இயக்கத்தின் கண்ணிய்யதை மரியாதையை குலைக்க முயற்சித்து வருகிறது என்று கூறினார்.
அதன் பிறகு பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய பொது செயலாளர் கே.எம்.ஷெரிப் அவர்கள் ஆண்டறிக்கை சமர்பித்தார். அறிக்கையில், பரவலாக அணைத்து பகுதிகளிலும் உறுப்பினர்களின் சேர்க்கை நடைபெற்று உருபினர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்த்துள்ளது என்றும் குறிப்பாக தென் இந்தியாவில் நல்ல வளர்சியடைதுள்ளதாக குருப்பிட்டார்.
சமூக பொருளாதார அரசியல் சூழல் குறித்த விவாதம் நடைபெட்ட்றது . இயக்கத்தின் கடந்தகால நடவடிக்கைகள் பற்றிய மீளாய்உம் வருங்காலத்தில் செய்யக்கூடிய அம்சங்கள் குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வருகின்ற இரண்டாண்டுகாலதிர்கான தேசிய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெட்ட்றது .
அதனை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய செயற்குழு உருபினர்கள் கூடி புதிய தேசிய தலைவர் மற்றும் செயலக உறுபினர்களையும் தேர்ந்தெடுத்தனர். தேர்ந்தேடுக்கப்பட்டவரின் விவரம் பின்வருமாறு

சேர்மன் : இ எம் அப்துல்ரகுமான்
துணை தலைவர் : எம் முகமது அலி ஜின்னா
பொது செயலாளர் : கே எம் ஷரிப்
செயலாளர் : யாசர் ஹசன்
பொருளாளர் கே பி முஹம்மது ஷெரிப்

அதனை தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது
1. போதுவால்வியல் ஊழல்
2. பீகார் தேர்தல் தரும் படிப்பினை
3 பொய் பிரசாரம் மற்றும் ஊடுருவல் பற்றிய எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்
4 இடதுசாரிகள் வளதுசாரிகலானது
5 அப்பாவி சிறைவாசிகள் விடுதலை
6 இறுதியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்மன் மற்றும் தேசிய செயற்குழு உறுபினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சேர்மனுடைய இறுதி உரையுடன் நிகழ்ச்சி நிறையுற்றது.

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 150 தேசிய பொதுகுழு உறுபினர்கள் கலந்து கொண்ட பொதுகுழு கூட்டம் மூன்று நாட்டகள் நடைபெட்ட்றது இதில் பல்வேறு மொழிகளில் உறுபினர்கள் கலாச்சார நிகழ்சிகளை நடத்தி திறைமைகளை வெளிப்படுத்தினர்.

ஊடக தொடர்பாளர்
பாபுலர் பிரண்ட் ஆப் இந்திய
தேசிய தலைமையகம்
பெங்களூர்